Wednesday, 17 July 2013 - 0 comments

பருப்பு புளி மசியல்

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்

பயத்தம் பருப்பு - 1/4 கப்


கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்


புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு


உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்


வெந்தயம் - 1/2 டீஸ்பூன்


காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை


பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை


கறிவேப்பிலை - சிறிது







செய்முறை:

புளியை ஊற வைத்துக் கரைத்து, தேவையான நீரைச் சேர்த்து ஒரு கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும்.

 துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை குக்கரில் போட்டு, பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். 

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போடவும். அத்துடன் வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து அத்துடன் புளித்தண்ணீரையும், உப்பையும் சேர்த்துக் கொதிக்க விடவும். 

புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேக வைத்துள்ளப் பருப்பை மசித்து சேர்க்கவும். மீண்டும் ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்

சூடான சாதத்துடன் பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...